Wednesday 11 June 2014

அன்னையர் தினம் - கவிதை




அன்னையர் தினமதில்
ஆயிரம்பேர் வாழ்த்திடுவர்

அக்கம் பக்கம் எல்லாம்
காணும் பெண்களுக்கு
முகம் மலர வாழ்த்தி
முகமன் செய்திடுவர்

முலை தந்த அன்னை
முனகிக் கிடக்கையிலே
மனம் வந்து ஒன்றும்
மாற்றுவழி செய்திடார்
மக்கள் என்று கூறி
மாய்மாலம் செய்திடுவர்

மலர்ந்த முகத்துடனே
மண்ணிற்குத் தந்தவள்
மனம் கோண நடந்திடுவர்
மதிகெட்டு நின்றிடுவர்
மலர் ஒன்று வாழ்வில்
மயக்கம் தந்தவுடன்
மாற்றான் போல் நின்று
மார்தட்டிப் பேசிடுவர்

மக்களை பெறுகையிலும்
மலர் மேனி நோவெடுக்க
மற்றவற்றை எண்ணாது
மனதாலும் காத்திடும் தாய்
முதுமையின் கொடுமையிலும்
மெலிந்த மனம் தளராது
மேன்மைகள் செய்தே
மேதினி விட்டகல்வாள்
மாதெனும் மகத்தானவள்
மாண்பில் மலையானவள்

No comments:

Post a Comment