Wednesday 11 June 2014

வசந்த காலம் - கவிதை





வசந்த காலத்தின் வருகையோடு
மனம் வாசனை கொள்கிறது
இருண்ட வானின் எண்ணம் களைந்து
இயல்பாய் எல்லாம் இருக்கிறது

கோலங்களும் காலங்களும்
கோட்பாடுகள் மறந்து வாழ்வதில்லை
கோடு கிழித்து காலம் கடத்தாது
கடமைகளைச் சரிவரச் செய்கின்றன

ஏற்பாடுகளின் எதிர்த்தலின்றி
எல்லோர்க்கும் எல்லாமானதாய்
எள்ளளவேனும் எதிர்பார்ப்புகளின்றி
எல்லைகளே வகுக்க முடியாதபடி

பருவங்களின் செழிப்பில்
பார்க்குமிடமெங்கும் பக்குவமடைந்து
பலன் எல்லாம் படைப்பிற்க்காய்
பாகுபாடு கொஞ்சமுமின்றி
பாரெங்கும் சேவை செய்கின்றன

காய்களும் கனிகளும்
பூக்களும் புனைவுக்களுமாய்
புதுப்புது அர்த்தங்கள் காட்டி
புரையோடிப் போகாது
பசும் புரட்சி செய்கின்றன

ஆனால் நாம் நாளும் பொழுதும்
இயற்கையின் எச்சங்களை
இயல்பின் இருப்பற்றதாக்கி
ஏதுமற்ற எதிர்வினைகளோடு
எதிர்பாத்துக் காத்துக் கிடக்கிறோம்


நிவேதா 
10.06.2014

No comments:

Post a Comment