Wednesday 11 June 2014

தேசம்



உனக்கும் எனக்குமான இறுமாப்பு
ஏகாந்த வெளிதனில்
எல்லைகளற்று விரிந்திருந்தது

அதுவே இன்று நிட்சயம் அற்றதாய்
நம்பிக்கையற்றதாய் நாளும்
நடுவானில் நூலறுந்த பட்டமாய்
நரகமாகிக் கொண்டிருக்கிறது

எந்நேரமும் உச்சரிக்கும்
இரகசிய மந்திரமாய் மனம்
ஏக்கங்கள் கண்டு இன்றும் வாழ்கிறது
ஏதிலியாய் எதுவுமற்று

வாழ்தலற்ற வகையின்றி
வரம்புகள் கடந்தோம் தான்
வகை தெரியா மூடர்களாய்
வெற்று வெளியில் நாமின்று

வேலிகள் எதுவும் இன்றி
விழுதுகள் கூட இன்றி
வேடர்களின் வில்லாய் நாம்
வசமானோம் வரப்புகள் இன்றி

விதியின் சதிதானா வீழ்ந்தது
மதியின் தவறிய கணக்காய்
மனிதம் தொலைத்த மனம்
மிச்சத்தின் எச்சங்களாக எங்கும்

எண்ணக் கணக்குகள் தவற
எதிரிகள் எண்ணற்றுப் போக
எதுமற்றவர்களாய் நாங்கள்
எப்படியோ வீழ்ந்தோம்

வீழ்ந்ததன் பின்னரான வலி
என்ன செய்து என்ன யார் வந்தும் என்ன
எதுகொண்டும் என் மனதை
ஆற்றவே முடியவில்லை

No comments:

Post a Comment