Wednesday 11 June 2014

எண்ணங்கள்



எண்ணங்கள் எப்போதும்
எதிரொலிகளாய் நிரப்பப்பட்டிருக்கின்றன
எல்லையற்ற வெற்றிடங்களின்
ஏகாந்தத்தில் கற்பனைகள்
கண்டபடி பாய்கின்றன

மனதின் விருப்பத்துக்கும்
ஆசைகளில் அலைதலுக்கும்
அங்கீகரிக்காதவை கூட
அகலக்கால் வைத்தபடி

எத்தனை தூரமும்
எத்தனை வேகமும் கொண்டதாய்
எந்திரங்கள் போலன்றி
எதிர்ப்பற்று எங்கெங்கோ அலைகின்றன

ஏன்தான் இத்தனை ஆசைகளோ
எவரோடும் ஒப்பிட்டு ஒப்பற்று
எதிரிகளாகின்றன எண்ணங்கள்
எப்போதும் எம் மனதுக்கு ஏற்ராற்போல்
எம்மை மட்டும் நினைவில் கொண்டபடி

No comments:

Post a Comment