Monday 3 November 2014

நிலாவே நீ ஏன் - கவிதை


நிலாவே நீ ஏன்
நிதமும் எறிக்கின்றாய்
நீல வானின் நிமிர்வு கண்டு
நெகிழ்ந்தோ நீ வருகின்றாய்

மேகப் பொதி விலக்கி
மென் முகம் காட்டி
மதிகெட்ட மாந்தர்
மனதை மயக்குதற்கோ
மங்கையே நீ வருகின்றாய்

கோடி இன்பம் கொடுத்தே
மனம் கொள்ளை கொண்டு
மேன்மை கொள் மாந்தரை
மயக்கம் கொள்ளவைக்க
மாலையில் வருகின்றாய்

இரவின் எளிமையிலும்
இதமான தென்றலுடன்
அத்தனை பேருக்குமாய்
எதிர்பார்த்தல் எதுவுமின்றி
இத்தனை ஆண்டுகளாய்
எப்படி நீ எறிக்கின்றாய்???


நிவேதா உதயன் 
03.11.2014

No comments:

Post a Comment