Friday 14 August 2015

இமை மூடா நினைவுகள்





நினைவுகளின் நிர்வாணத்தை
மறக்க மறுக்கும் மனதை
என்ன செய்வது

மறுதலித்தே தொகுத்து
மீண்டும் மீண்டுமாய்
மாயக்கண்ணாடியில் பார்ப்பதாய்
நிழல் பிம்பத்தைத் தோற்றுவித்து
நிலைதடுமாற வைக்கிறது

காரணமின்றி கண்முன் தோன்றும்
கனவற்ற காட்சிகளின் சாட்சி
வேண்டுவன எல்லாம் எப்போதும்
காரியங்களோடு கைகோர்த்தபடி
காயங்களை காணும் இடமெங்கும்
கண்மூடி விதைத்தபடி செல்கின்றன

காரணங்கள் அற்று நானும்
காணவே முடியாதனவற்றை
காண்பதான மாயை சுமந்து
மீண்டுவரா நாட்களின் தகிப்பில்
மனதின் மகிழ்வு தொலைய
எந்நேரமும் விடுபட எண்ணிடும்
நூலிழை பற்றியே நிதமும்
எழுந்துவர எத்தணித்தபடியே
எதுவும் முடியாது காத்திருக்கிறேன்


18.07.2015

No comments:

Post a Comment