Tuesday 17 February 2015

காத்துக் கிடக்கின்றனர் - கவிதை








காத்துக் கிடக்கின்றனர் அவர்கள்

அவளின் ஒவ்வொரு வரிகளுள்ளும்
பிரவகித்து ஓடும் காதலிக்கப்படுவதான
பிம்பங்களின் நிழலில் குளிர் காய்தலில்
தம் இழந்து போனவைகளையும்
கனவுகளுள் புதைந்து போனதையும்
எச்சங்களின் படிமங்களில் 
எப்படியோ காண்பதான பிரமைகளையும்
துலாவமுடியாத இருட்டில் தினம்
குருடாகிப் போன கண்களின் வெளிச்சத்தில்
தேடியபடியே இருக்கின்றனர்

கண்முன்னே காத்திருக்கும் 
காரணமற்ற வெளிச்சங்களை
பார்த்திட முடியாத மனக்குருடாய்
மடை திறந்தோடும் மனவாற்றின் வழியே
ஆசையின் அகல்விளக்கேற்றி
அடைந்திடமுடியாததான அகத்தின் அருகே
சஞ்சரிப்பதான பிரமை கூட்டியபடி
வீழ்ந்திடாத பழமரங்களுக்காய்
கற்களைத் எந்நாளும் எறிந்தபடி   

நிவேதா உதயன்
17.02.2015

No comments:

Post a Comment