Thursday 30 October 2014

வானம் இன்று - கவிதை


வானம் இன்று வண்ணமிழந்து அழுகிறது
மேகம் கூட நிறமிழந்து பொழிகிறது
ஊசிக் காற்று உடலை வருத்த
உணர்வுகள் எல்லாம் உடல் சுருக்கி
ஒன்றுமற்று ஓடியே செல்கின்றன

இளவேனில் மழை இதமாய் நனைத்திடும்
கோடையில் மழை குதூகலம் தந்திடும்
மாலை மழை மனதை மயக்கிடும்
குளிர்கால மழையோ குலை நடுங்கிக்
கூதல் ஓடக் கொட்டமடக்கிடும்

கோடையை நனைக்க மழை வேண்டும்
குழந்தைகள் நனைய மழை வேண்டும்
காதலர்களுக்கும் மழை வேண்டும்
கனவுகள் கடந்து காலம் காட்டவும்
நினைவுகள் களைந்து நின்மதியுறவும்
நினைந்து நினைந்து நீ வாராது மழையே
நினைக்கும் பொழுதில் மட்டும் நீ வா


08.10.2014
Nivetha

No comments:

Post a Comment