Saturday 7 November 2015

அன்பென்னும் அரிச்சுவடி


 
 
 
 
 
அன்பெனும் அரிச்சுவடி கொண்டு
அத்தனை உயிர்களும் உலகில்

ஆலமரமாய் விழுதுகொண்டு
ஆணிவேர்வரை ஊன்றியபடி
இலவம் பஞ்சாய் அப்பப்போ
இல்லாமலும் போய் விடுகிறது

ஈனர்கள் சிலர் இற்றவராய்
ஈனவே மனமற்று அன்பை
உணர்வுகள் உக்கிப்போக
உலர்ந்துபோக வைக்கின்றனர்

ஊனமுறு மனது கொண்டு
ஊழ்வினை புரிகின்றனர்
எத்தனை ஏதம் வரினும் பலர்
எந்திரங்களாய் எதுவும் தாங்கி
ஏக்கம் மட்டும் எதிர்வு கூறிட
ஏதுமற்றுக் காத்திருக்கின்றனர்

ஐயத்தின் அதிர்வுகளில் எல்லாம்
ஐம்பொறியும் அடங்கிவிட
ஒற்றை மரக் கிளையாய்
ஒன்றிணைய முடிய மனதை
ஓசையின்றி ஒடுங்கச் செய்து
ஓலங்களை ஒலியிழக்கச் செய்து
ஔடத்தின் வீரியத்தில்
ஔவியம் கொண்டபடியே தினம்

No comments:

Post a Comment