Sunday 30 November 2014

உயிரின் வலி அறிவாயோ - கவிதை


உயிரின் வலி அறிவாயோ மானிடா
ஊனுருக்கி உடல் கருக்கி
உள்ளனவெல்லாம் மறக்கும்
உயிரின் வலி அறிவாயோ

உள்ளக் கருவறுத்து
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
உயிர் வதைத்து உணர்வு கொல்லும்
உயிரின் வலி அறிவாயோ

எதுவுமற்று ஏதுமற்று
எங்கெங்கோ மனம் அலைத்து
ஏக்கங்கள் கொள்ளவைக்கும்
உயிரின் வலி அறியாயோ

எதிரியாய் எமை வதைத்து
எட்டி நின்றே வகுத்து
எல்லையில்லா துன்பம் தரும்
உயிரின் வலி அறியாயோ

எண்ணத்தை எதிரிகளாக்கி
எல்லையற்று ஓடவைத்து
என்புகள் மட்டுமே ஆனதாய் என்
உயிரின் வலி அறியாயோ

சரணடைந்து சரணடைந்து
சர்வமும் இழக்க வைத்து
சக்தியெல்லாம் துறந்து நிற்கும்
உயிரின் வலி அறியாயோ மானிடா
உயிரின் வலி அறிவாயோ
18.11.2014
நிவேதா உதயன்

No comments:

Post a Comment