Wednesday 3 June 2015

எண்ணக் குவியல்



என் மன  வெளிகளிடையே 
என் நலிந்த நம்பிக்கைகள்
எனைப் பார்த்து ஏளனம் செய்தபடி 
எண்ணிக்கையற்று நகர்கின்றன

யாருமற்ற வனாந்தரத்தில்
நான் மட்டுமே எதிரியுடன்
தனித்திருப்பதான எண்ணம்
எல்லைகளற்று எனை நிரப்பி
என்றுமில்லாததாய் எனை அழுத்த
எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி
ஏதிலியாய் நான் மட்டும்
எண்ணக் குவியலின் நடுவே
எக்குத்தப்பாய் எனை மறந்து
எழுவதர்க்காய் எத்தனிக்கிறேன்

கட்டப்பட்ட கைகளும் கால்களும்
கருத்துகள் இன்றியே சிதைய
காலாவதியாகும் கோபமடக்கி 
கரைகின்ற கைகளின் கனவடக்கி 
கோலங்கள் காணாமற்போகும் நாளின்
கடைசித் துளிகளின் கதவடைக்கும்
கண்ணீரின் கனமடக்கி  நலியும் 
நம்பிக்கைகளில் பின்னிய கூட்டை
நெகிழ்தலின்றி நகர்த்துவதர்க்காய்
நெருப்பின் மேலே நடக்கின்றேன்

No comments:

Post a Comment