Tuesday 23 June 2015

தீரா ஆசை - கவிதை

 


எப்போதும் மழைத் தூறலாய்
மனதெங்கும் உன் நினைவு
அப்பப்போ இடிமின்னல்
சூறைக்காற்றுடன் மழை தான்
ஆனாலும்
நனைவதர்க்கே மனம்
ஆசை கொள்கின்றது


சிரிப்புடன்பேச வந்தால் 
சிறுகற்கள் கொண்டு 
சினத்துடன் எனைத் தாக்கி
சிறகொடிய வைக்கிறாய்
ஆனாலும்  உன் அன்பில் 
சிதறிப்போகவே 
மனம் ஆசை கொள்கிறது 

அடை மழையில் நனைந்து
ஆடை குளிர நான் 
ஆசையாகப்பேச வந்தால்
அப்போதும் கதவடைத்து 
அல்லலுற நீ வைத்தாலும் 
உன் அன்பில் திளைத்து 
திணறவே திண் மனம் 
தீரா ஆசை கொள்கிறது 

மூடனே மனதைப் படிக்கா
மனதற்ற மூர்க்கனே
மனதிருந்து மருவின்றி
உன் நினைவழிக்க மனம்
மட்டிலா ஆசை கொள்கிறது
மறுபடியும் மறுபடியும்
மனவறையின் பக்கமெல்லாம்
மிச்சமின்றி அமர்ந்திருக்கும்
மூச்சுக் காற்று நீயாகி
மெய்மறந்து போகிறது மனது





No comments:

Post a Comment