Friday 14 August 2015

நிற்கதியாகி நிற்பதான




நிற்கதியாகி நிற்பதான உணர்வில்
நெஞ்சக் கூட்டில் நிதம்
பாறாங்கல்லாய் அடைக்கிறது
சுவாசத்தின் காற்று

அன்பின் வெளிப்பாடற்ற அசைவு
அங்கத் திசுக்களில் எல்லாம்
அசைக்கமுடியாத வலியை
நினைக்காத நேரத்திலும் தந்து
நெருப்பின் சுவாலை ஆகிறது

அதீத உணர்வின் வெளியில்
இதயத்தின் குருதிப் பாதைகளில்
இசைப்பு இறுமாப்பிழந்து நிற்க
எதிர்வலுவற்று இயங்க மறந்து
ஏக்கங்களை மட்டும் மூச்சாய்
எங்கும் பரவவிட்டபடியே தினம்
எதிர்நீச்சல் போடுகின்றன

மனவெளி எங்கும் உன் ஓசை
கேட்டுக்கொண்டே இருக்க
மரத்துப்போகா மாய மனதை
எது செய்தும் மாற்ற வழியின்றி
எதிரொலித்து வஞ்சம் புரிய
மரணத்திடம் மீள்வதற்காய்
தினம் என்னைத் தயார் செய்கிறேன்
11.08.2015

No comments:

Post a Comment