Friday 14 August 2015

ஏக்கம் சுமந்து







உரிமையற்ற ஒன்றிற்காய்
உளம் ஏங்கி உயிர் துடிக்கும்
கருணையற்ற மனிதருக்கு
காணும்வலி
கணம்கூட உணராது

நெஞ்சில் வெடித்தெழும்
நேசத்து  நிகழ்வுகளின்
சொல்லொணாத் துயர் சுமந்து
சொல்லி அழாச் சுமைகளுடன்
காத்திருக்கும் கணங்கள் கவி
சொல்லிட முடியாது

காலாண்டு கூடவில்லை
கடல்போல் அன்பு

காட்டாற்று
வெள்ளமாய்
கரையுடைக்க
காலத்தின் வரவுக்காய்
காத்திருக்க மட்டுமே
முடிகிறது முடிவின்றி

முடிவேதுமில்லா
அண்டப் பெருவெளியில்
அரவமற்று அனாதையாய்
நிற்பதாய் உணர்கையில்
உள்ளத்தெழும் உணர்வின்
கொடுமையில்
உறக்கம் மட்டுமா
தொலைந்து போவது???

No comments:

Post a Comment