Wednesday 11 June 2014

சொட்டுச் சொட்டாய் - கவிதை





சொட்டுச் சொட்டாய் இன்பம்
சொக்க வைக்கிறது
சுற்றிவர எல்லாம்
சுகந்தமாய் இனிக்கிறது

சித்திரங்கள் பலவும்
சிறகு விரித்து
சிங்காரமாய் வந்து
செம்மை கொள்ள வைக்கிறது

சில கனவு இனிக்கிறது
சிலது கனக்கிறது
சோர்வற்று மனம்
சொப்பனங்கள் காண்கிறது

சொந்தம் மறக்கிறது
சுமைகள் அறுகிறது
சோகம் மறந்த நிலை
சிகரங்கள் தோற்கிறது

செம்மை படர்ந்த மனம்
சினம் கொள்ள மறுக்கிறது
சிந்தை முழுதும் உன்னை
சிவனாய் நினைக்கிறது

செந்தமிழே உன்னை
சேர்ந்திடக் கண்டேன்
சிதம்பர ரகசியமாய்
சேவிக்க உளம் கொண்டேன்

நிவேதா 
10.05.2014

No comments:

Post a Comment