Wednesday 11 June 2014

வானம்


இன்றும் வானம் இருள் சூழ்ந்தபடி
கார்முகில்கள் கண்ணசைக்கக்
காத்திருக்கின்றன

காற்று வீசாது மௌனம் காத்து
கரைபுரளும் கார்முகிலின்
கண்ணீர் துடைக்க
கலங்கிக் காத்திருக்கிறது

ஆனாலும் இன்றின் போதில்
என் மனதில்
எதுவுமில்லை ஏக்கங்கள்
எதுவுமற்றதாயும்

அதனையும் எனக்காய்
ஆவலுடன் காத்திருப்பதாய்
ஆழ்மனதில் ஏற்பட்டுப் போன
அசைக்கமுடியாத
நம்பிக்கையின்பாற்பட்டு
நலிவுகளின் நம்பகத் தன்மையை
அறுத்தெறிந்ததாய்
ஏக்கங்கள் விடைபெற்று
எல்லாமும் எனக்கேயாகி
எதுவுமற்று நானிருக்கிறேன்

No comments:

Post a Comment