Wednesday 11 June 2014

தடைகள்



தடைகள் ஏற்படும் போது
தவிக்கும் மனதை
எது கொண்டு ஆறுதல் படுத்துவது

பகிர்தலும் எதிர்பார்த்தாலும்
எப்போதுமேயானதாய்
நம்பிக்கையின் ஒருவிளிம்பில்
நகர்கிறது வாழ்வு

மனமிருந்தும் மனமின்றி
அலைவோரை
புரிந்தும் புரிய மறுப்போரை
எது கொண்டு அளப்பது

மாறுதலின் நகர்வுக்குத்
தயார் எனச் சொன்னாலும்
மாற்றமுடியாது அல்லலுறும்
மனதைத்தான் என்ன செய்வது

உணர்தலற்ற நேசம்
உயிரற்ற நட்பு
புரிதலற்ற பாசம்
அகல மாட்டாத மனம்

இத்தனையும் கொண்டு
இன்னும் இருக்கிறது
மாசுபடா நேசம்
மல்லுக்கட்டிக் கொண்டு

எப்படி உரைத்திடினும்
என்மனதின் ஓலங்கள்
அடங்கமுடியா அவலத்துள்
அல்லாடிக்கொண்டே இருக்கிறது

No comments:

Post a Comment