Sunday 30 November 2014

மனதில் நாம் போடும் கோடுகள் - கவிதை


மனதில் நாம் போடும் கோடுகள்
மற்றவர் அறிவதில்லை

எமக்குள் எப்போதும் தோன்றும்
எண்ணத்தின் குவியல்களில்
எதிரும் புதிருமாய் பல
கோடுகளை வரைகிறோம்


நேராகி நீண்டு சிலவும்
நெளிதல்களோடு பலவும்
நெட்டிப் பாய்ந்தபடி சிலதுமாக
எப்படியெல்லாமோ வரைகின்றோம்

காரண காரியங்கள்
அறிந்திடாத மனத்தடத்தில்
தண்டவாளமற்றுப் பல
வண்டிகள் ஊர்ந்தபடி எப்பொழுதும்

மீட்சியற்ற வலைப்பின்னல்களாய்
எப்போதும் எம்மனதின்
நம்பிக்கை தகர்த்து
வலை பின்னும் சிலந்தியாய் வதை

புரிந்தும் புரிய மறுக்கும்
நிதர்சனம் கொல்லும் உண்மையின்
நீட்சியில்லா வாழ்தலில்
நித்தமும் கொடுக்குகளாய்
கொட்டியவண்ணம் மனம்
குருடாய் வெளிச்சம் தேடுகின்றது

16.11.2014
நிவேதா உதயன்

No comments:

Post a Comment