Friday 14 October 2016

 Image may contain: 1 person , text



காரிருளில் கத்தியின் மேல் நடக்கிறேன்
கனவுகள் சுமந்தபடி
கடவுளின் காட்சியைக் காண்பதாய்
காயங்கள் சுமந்தபடி
கண்ணிருந்தும் பார்வையின்றி
வாயிருந்தும் பேச்சின்றி
மரத்த மனதின் மடிப்புக்களை
மனதுள் எண்ணியபடி


எக்கணமும் நான் வெதும்பி
வீழ்ந்துவிடாதிருக்க
அத்தனை வாயில்களும்
திறந்தே இருக்கின்றன
ஆனாலும் அவாக் கொண்ட மனம்
அல்லல் கடந்தும்
அடையாளம் இட்டதுவாய்
அகலக்கால் வைத்தபடி
அரவமின்றி நெடுந்தூரம்
நடந்துகொண்டே இருக்கின்றது

முன் வினையின் விதியது
முடிச்சாகி இறுகித் தினம்
மூச்சளக்க வைத்தபடி
மனத்தின் குரங்கிடம்
மன்றாடவே செய்கின்றது
ஆயினும் தெரிந்தே நான்
விட்டில் பூச்சியின் வலிந்த
மரணத்தின் வீழ்ச்சியில் மெலிந்து
நிறுத்தமுடியாத் தூரம் வரை
நடந்துகொண்டே இருக்கிறேன்


14.10.16
நிவேதா


LikeShow More Reactions
Comment

No comments:

Post a Comment