
இதயத்தில் கல் சுமந்து பிறந்திடு
மனதின் பாரம் அகன்றுவிடும்
கண்களில் கூர்மையற்று இருந்திடு
குற்றும் வலிகள் அகன்றுவிடும்
சிந்தையில் செயலற்று நின்றிடு
சேதங்கள் உனைவிட்டு அகன்றிடும்
செவிப்புலன் இருந்தும் செவிடராய் இருந்திடில்
சேதாரம் இன்றி வாழ்வு நகர்ந்திடும்
வார்த்தைகள் இன்றி வலிகள் சுமந்திடில்
வழிகள் ஆயிரம் வரிந்தே கண்டிடும்
நட்புக்காய் உறவுக்காய் ஊருக்காய் உலகுக்காய்
உருக்குலைந்து வாழ்ந்தே நாமும்
ஒட்டுண்ணிகளாய் ஓடற்ற விலங்கினமாய்
உள்ளும் புறமும் ஒளியற்ற வாழ்வை
ஏற்றும் ஏற்காது அலைகின்றோம்
எந்திரங்களற்று எதுமற்றவர்களாய்
எமக்காய் வாழ்வது எப்படி ????
சூதுகளற்று வாதுகள் செய்து
சுதந்திரமாய் வாழ்வதெப்படி ????
பாதைகளற்றுப் பறவைகளாக
பறந்து திரிவது எப்படி????
கோதுகளற்று கொடுமைகளற்று
கொள்கை வகுப்பது எப்படி????
கூடுகளற்று காடுகள் எங்கும்
கரைந்து திரிவது எப்படி ????
கோடுகள் கடந்து கொண்டவை துறந்து
கோலங்களாக காலங்கள் கனியக்
காத்திருப்பாயா பெண்ணே நீ ????
No comments:
Post a Comment