Tuesday 3 February 2015

தேவைகளுக்காய் மனிதர் - கவிதை





தேவைகளுக்காய் மனிதர்
தினந்தோறும் திரை மனிதராய்
நடித்தபடியே நடமாடுகின்றனர்

மனதின் ஆழத்தின்
அல்லல்கள் அறியாதவராய்
சுயநல ஆடையணிந்து
நிதம் மாறும் சுவரொட்டிகளாய்
காட்சி தருகின்றனர்


புரிதல் என்பது புனைதலாகி
புரையோடிப்போனதான பந்தங்களின்
புனிதமற்ற புழுக்களின் நகர்விலான
பாதைகளில் புற்றீசலாய்
புறப்பட்டபடி தினமும்

பரிதவிப்பும் பயமும் கோபமும்
பார்க்கும் இடம் எல்லாமாக
பயன் விளையா நிலமாய் நிதம்
பக்குவம் கெட்டபடி மனதில்
பாறைகளைத் தோற்றுவித்தபடி

மனதே நீ மாந்தரை தெரிந்தே
மீண்டும் மயக்கம் கொள்ளாதிரு
சுயநலம் கொண்ட மாந்தர்
சுயத்தை அறிந்தபின்னும்
சொப்பன வாழ்வில் வீழ்ந்து
சோர்வு கொள்ளாதிரு
சிந்தை கொன்று சிறுமை கண்டு
சித்தம் கலங்காதிரு மனமே

02.02.2015
நிவேதா உதயன்

No comments:

Post a Comment