Saturday 7 November 2015

ஏற்புடையதாயினும் ஏற்புடையதாகா






ஏற்புடையதாயினும் ஏற்புடையதாகா
எதிர்பாரா எதிர்வினைகள்

அதிர்வினது ஆற்பாட்டமற்ற அல்லல்
ஊழ்வினையின் ஊனுருக்கி ஊமையாக்க
ஊனறுக்கும் உணர்வின் கூற்று
ஊடறுத்து உள்ளம் கருக்கி நிற்கும்
வேரறுத்து வினைபுரியும் மரணவாசம்
வேதனையின் விளிம்புகளில் வெந்நீராய்
விழி நனைத்துத் தினம் வேடம் கட்டும்

பாரின் பாச வலையறுக்க பற்றுழன்றுகூடி
பாவச் சுமைகள் எண்ணப்படுகையில்
படிகள் கடந்து ஒவ்வொன்றாய் தாண்டி
பற்றின் பக்குவமற்ற நிணங்களின் தோற்றம்
பார்வை மறைத்துத் தினம் சுமை கூட்ட
மரணத்தின் மணம் தெரிந்து மண்டியிடுகையில்
மனக்குரங்கு ஒவ்வொன்றாய் மீட்டல் செய்யும்

என்ன எண்ணி என்ன எப்போதுமே
ஏக்கமும் கோபமும் எள்ளலும் எகிறலும்
எல்லாம் முடிந்தபின் தான் எல்லை காட்டும்

No comments:

Post a Comment