என் மனதில் தோன்றிடும் எண்ணங்களின் பிரதிபலிப்பை வார்த்தைகளாக்கி இங்கு கோர்த்திருக்கிறேன்.
Friday, 13 June 2014
முடிவுறாப்பயணம் - கவிதை
கால் கடுக்க நடந்து வந்தும்
கடுகளவும் முடிவுறாப் பயணத்தின்
முடிவு காணா வெற்றிடங்களில்
வினாக்கள் இன்றும் மிச்சமிருக்கின்றன
உயிர்ப்பற்ற உறவுகளின்
ஊழ்வினைகள் கொல்லும் நிலை
உருக்குலையா வாழ்விலும்
ஓரங்களில் ஒட்டியபடி இன்றும்
மகிழ்ந்தாடும் மனதின் மாடி அறைகளில்
மறைப்பதற்கு ஏதுமற்ற மனதோடு
மகுடியின் ஊதல்கள் கலந்து
மயக்கும் வரை கேட்கின்றன
கிழித்த கோடுகளின் எல்லையில்
கிடந்தது அல்லாடும் தடைகள் தாண்டி
கேடயமற்ற போர் வீரனின்
படிமமற்ற எதிர்த்தலிநூடே
பயணிக்கின்றது வாழ்வு
இறுதி மூச்சின் எண்ணங்கள்
எங்குமாக இருக்கப் போகின்றன
எட்டும்வரை முயல்வதாயும்
எட்டாவிடில் விடியலே அற்ற
இரவுகளின் எதிர்பார்ப்புக்களுடன்
தொடரும் வாழ்வின் வசந்தமாய்
Thursday, 12 June 2014
தேரோடும்வீதி - கவிதை
எழில் பொங்கும் என்னூரின்
ஏகோபித்த நினைவுகளோடு
என் பயணம் தொடர்கிறது
திருவிழாவின் தெருக்களில்
தென்றலாய் வந்துபோனவைகளும்
வீதியில் தேரோட நீரோட்டமாய்
வந்து போனவைகளும்
மனதில் மங்கலாக வந்து போகின்றன
மார்கழி மாதத்து மரகதத் துகள்களாய்
இன்னும் நெஞ்சத்து அடிப்பரப்பில்
அடர்த்தியாய் ஒட்டிக்கொண்டபடி
அணைத்து ஆறுதல் தருகின்றன
வீட்டோரத்து வெடிப்புக்களின்
இடைவெளிகளில் தவழும்
எறும்புகளின் வரிசையின் கூட்டுப்போல்
எல்லைகளற்று நீள்கின்றன நினைவுகள்
கால்கள் புதையும் கனவுகளோடு
கண்விழித்த காட்சிகள் இன்னும்
பசுமை குலையாத பச்சை வயலாய்
பள்ளிகொள்ளும் போதில் வந்து போகின்றன
எத்தனை கடந்தும் அத்தனையும்
அசைக்க முடியா ஆணிவேராய்
அடிமனத்தின் படிக்கட்டுகளில்
ஆழப்பதிந்து அல்லல் செய்தபடியே
ஏகோபித்த நினைவுகளோடு
என் பயணம் தொடர்கிறது
திருவிழாவின் தெருக்களில்
தென்றலாய் வந்துபோனவைகளும்
வீதியில் தேரோட நீரோட்டமாய்
வந்து போனவைகளும்
மனதில் மங்கலாக வந்து போகின்றன
மார்கழி மாதத்து மரகதத் துகள்களாய்
இன்னும் நெஞ்சத்து அடிப்பரப்பில்
அடர்த்தியாய் ஒட்டிக்கொண்டபடி
அணைத்து ஆறுதல் தருகின்றன
வீட்டோரத்து வெடிப்புக்களின்
இடைவெளிகளில் தவழும்
எறும்புகளின் வரிசையின் கூட்டுப்போல்
எல்லைகளற்று நீள்கின்றன நினைவுகள்
கால்கள் புதையும் கனவுகளோடு
கண்விழித்த காட்சிகள் இன்னும்
பசுமை குலையாத பச்சை வயலாய்
பள்ளிகொள்ளும் போதில் வந்து போகின்றன
எத்தனை கடந்தும் அத்தனையும்
அசைக்க முடியா ஆணிவேராய்
அடிமனத்தின் படிக்கட்டுகளில்
ஆழப்பதிந்து அல்லல் செய்தபடியே
Wednesday, 11 June 2014
விடிவெள்ளி -கவிதை
விடிவெள்ளி மீண்டும் வானில் தெரிகிறது
வெடி கண்ட நிலம் போல்
சிதறிய மனம் மீண்டும்
விண்மீன்கள் கண்டு சிரிக்கின்றது
கொடுவானின் இடி மின்னல்
கொடுங் காற்று எல்லாம்
கோரத் தாண்டவம் ஆடி முடித்து
காற்று அலைகளின் சீற்றம் குறைந்து
கோலங்கள் காட்டி நிற்கிறது
வேருடன் மரங்கள் வீழ்ந்தன
எனினும் வாடை அடங்கி
மீண்ட வானின் மிதப்பின் வேகத்தில்
மருண்ட மேகங்களின்
மகிழ்ச்சி ஒலியாய் மீண்டும்
மின்னல் கீறி மறைகின்றன
ஓசை அடங்கக் காத்திருந்தேன்
என் ஆசை அடக்கி மேகத் தீயுள்
மோதும் உன் முகம் காண
முடிவேதும் இல்லா
மழை வானின் எல்லையில்
மண்ணொடு மண்ணாய்
மங்கியும் நானும் மகிழ்ந்திருப்பேன்
முடிவுற்ற வெளியின் முகில்கள் கடந்து
முடிவற்ற என் பயணம் முடிந்து
மலர் கண்ட வனமாய்
மலர்கின்ற மனம் கொண்டு
மீட்டும் உன் இசை கண்டு
முடிவிலா வானில் முடிவுகள் அற்று
மேவும் இசையாய் மின் மினிப் பூச்சிகள்
மனதசைத்துப் பறக்கின்றன
அஸ்தமிக்கும் பொழுதில் - கவிதை
அஸ்தமிக்கும் பொழுதில்
எண்ணங்கள் எருக்களாகி
எட்டமுடியா எல்லைவரை
ஏகாந்தம் தொடரும்
கடுகளவு எண்ணங்கள்
காடளவு கருக்கொள்ளும்
கண்ணிமைக்கும் பொழுது கூட
காலாண்டாய் கனமாகும்
ஒரு துளி வெள்ளத்தில்
ஓராயிரம் புளுதிகளாய்
எண்ணக் கோர்வையில்
ஏதேதோ வந்து போகும்
எல்லாம் இருந்தும்
ஏதுமற்ற ஏதிலியாய்
எல்லைகள் அற்று
எண்ணங்கள் நீண்டாடும்
வண்ணங்கள் நிறமிழந்து
வக்கற்று நிற்பதுபோல்
வகையற்ற கனவுகள்
வந்து வந்து நிழலாடும்
வார்த்தைகள் இழந்த மனம்
வாழ்வின்றி தவிப்பதுபோல்
வித்திட்ட நினைவுகள்
வெளிதனில் நிழலாடும்
ஒன்றெண்ணி ஒன்றற்று
ஓர விழி வரம்பில்
ஒவ்வொரு நினைவுகளாய்
ஓரங்கள் நனைத்திடும்
கானங்கள் அற்ற வரிகளின்
கனதியான காட்சிகளாய்
கட்டுப்பாடுகள் அற்று
கண்முன் கலைந்தாடும்
கரைகாண முடியாத கனவுகளின்
கடைசித் துளி மட்டும்
காட்சியில் விரிந்திருக்க
கண்ணயர முடியாது கரைகிறேன்
சொட்டுச் சொட்டாய் - கவிதை
சொட்டுச் சொட்டாய் இன்பம்
சொக்க வைக்கிறது
சுற்றிவர எல்லாம்
சுகந்தமாய் இனிக்கிறது
சித்திரங்கள் பலவும்
சிறகு விரித்து
சிங்காரமாய் வந்து
செம்மை கொள்ள வைக்கிறது
சில கனவு இனிக்கிறது
சிலது கனக்கிறது
சோர்வற்று மனம்
சொப்பனங்கள் காண்கிறது
சொந்தம் மறக்கிறது
சுமைகள் அறுகிறது
சோகம் மறந்த நிலை
சிகரங்கள் தோற்கிறது
செம்மை படர்ந்த மனம்
சினம் கொள்ள மறுக்கிறது
சிந்தை முழுதும் உன்னை
சிவனாய் நினைக்கிறது
செந்தமிழே உன்னை
சேர்ந்திடக் கண்டேன்
சிதம்பர ரகசியமாய்
சேவிக்க உளம் கொண்டேன்
சொக்க வைக்கிறது
சுற்றிவர எல்லாம்
சுகந்தமாய் இனிக்கிறது
சித்திரங்கள் பலவும்
சிறகு விரித்து
சிங்காரமாய் வந்து
செம்மை கொள்ள வைக்கிறது
சில கனவு இனிக்கிறது
சிலது கனக்கிறது
சோர்வற்று மனம்
சொப்பனங்கள் காண்கிறது
சொந்தம் மறக்கிறது
சுமைகள் அறுகிறது
சோகம் மறந்த நிலை
சிகரங்கள் தோற்கிறது
செம்மை படர்ந்த மனம்
சினம் கொள்ள மறுக்கிறது
சிந்தை முழுதும் உன்னை
சிவனாய் நினைக்கிறது
செந்தமிழே உன்னை
சேர்ந்திடக் கண்டேன்
சிதம்பர ரகசியமாய்
சேவிக்க உளம் கொண்டேன்
நிவேதா
10.05.2014
அன்னையர் தினம் - கவிதை
அன்னையர் தினமதில்
ஆயிரம்பேர் வாழ்த்திடுவர்
அக்கம் பக்கம் எல்லாம்
காணும் பெண்களுக்கு
முகம் மலர வாழ்த்தி
முகமன் செய்திடுவர்
முலை தந்த அன்னை
முனகிக் கிடக்கையிலே
மனம் வந்து ஒன்றும்
மாற்றுவழி செய்திடார்
மக்கள் என்று கூறி
மாய்மாலம் செய்திடுவர்
மலர்ந்த முகத்துடனே
மண்ணிற்குத் தந்தவள்
மனம் கோண நடந்திடுவர்
மதிகெட்டு நின்றிடுவர்
மலர் ஒன்று வாழ்வில்
மயக்கம் தந்தவுடன்
மாற்றான் போல் நின்று
மார்தட்டிப் பேசிடுவர்
மக்களை பெறுகையிலும்
மலர் மேனி நோவெடுக்க
மற்றவற்றை எண்ணாது
மனதாலும் காத்திடும் தாய்
முதுமையின் கொடுமையிலும்
மெலிந்த மனம் தளராது
மேன்மைகள் செய்தே
மேதினி விட்டகல்வாள்
மாதெனும் மகத்தானவள்
மாண்பில் மலையானவள்
காலைக் கதிரவன் - கவிதை
காலையில் கதிரவனின்
கதிரொளியில் கண்விழித்தேன்
கண்ணுறக்கம் தேய்ந்து
கட்டறுத்து ஓடிய
கனவுகள் விடைபெற
கற்பனைக் குதிரைகளும்
காணாமற் போக
கலங்கித்தான் போனது
கனவு தொலைத்த மனது
கோலங்கள் பலகொண்டு
கோடுகள் போட்டு
காண்பவை எல்லாம்
கண்முன்னே கொள்ள
கொஞ்சமும் தயங்காது
கொள்ளையிடத் துடிக்கும்
கோட்டையில் இருந்தாலும்
கொடுமதில் உடைத்து
கொல்லும் இரவதிலும்
கொழுகொம்பு அற்ற
கொடிகளைப் போல்
கோடியில் தவிக்கும்
கேடதுதான் என்றாலும்
கேட்கா மனம் மீண்டும்
கோர்த்திட முடியா
கூட்டுகள் அறுந்திட
குருட்டு நினைவில்
கும்மாளம் போடும்
கட்டுடைய கனிந்த
காலங்கள் காத்திருக்க
கொண்டமனம் என்றும்
குற்றுயிராய் கூறுபோட
கொடுமனம் கொஞ்சமும்
கொள்கை விட்டு வாராது
Subscribe to:
Posts (Atom)





