Wednesday 11 June 2014

காலைக் கதிரவன் - கவிதை




காலையில் கதிரவனின்
கதிரொளியில் கண்விழித்தேன்

கண்ணுறக்கம் தேய்ந்து
கட்டறுத்து ஓடிய
கனவுகள் விடைபெற
கற்பனைக் குதிரைகளும்
காணாமற் போக
கலங்கித்தான் போனது
கனவு தொலைத்த மனது

கோலங்கள் பலகொண்டு
கோடுகள் போட்டு
காண்பவை எல்லாம்
கண்முன்னே கொள்ள
கொஞ்சமும் தயங்காது
கொள்ளையிடத் துடிக்கும்

கோட்டையில் இருந்தாலும்
கொடுமதில் உடைத்து
கொல்லும் இரவதிலும்
கொழுகொம்பு அற்ற
கொடிகளைப் போல்
கோடியில் தவிக்கும்

கேடதுதான் என்றாலும்
கேட்கா மனம் மீண்டும்
கோர்த்திட முடியா
கூட்டுகள் அறுந்திட
குருட்டு நினைவில்
கும்மாளம் போடும்

கட்டுடைய கனிந்த
காலங்கள் காத்திருக்க
கொண்டமனம் என்றும்
குற்றுயிராய் கூறுபோட
கொடுமனம் கொஞ்சமும்
கொள்கை விட்டு வாராது

No comments:

Post a Comment