Wednesday 11 June 2014

வாழ்வின் பாதைகள்







வாழ்வின் பாதைகள் எல்லாம்
வகுக்கப்பட்டிருக்கின்றன
கோடுகளோடு மேடு பள்ளங்களோடு
கோடுகள் அற்றதாயும்
நெளிந்தும் வளைந்தும்

ஆனாலும் நாமும் முயல்கிறோம்
மூழ்குகிறோம்
முடிவே அற்று ஓடுகிறோம்
முடிந்தவை எல்லாம் செய்து
மூர்க்கத் தனக்களோடு
மூழ்கி முத்தெடுக்கும் ஆசையுடன்
முடியாதவைகளுக்குமாய்
முடிந்தவரை மூச்சடக்கி

ஆனாலும் எல்லாம் அளவற்றதாகி
அல்லும் பகலும் ஆட்படுதளோடு
அகல்வினை நோக்காது
குறை வினை கொண்டு
கூர்ப்புகள் அறியா மானிடராய்
கார்ப்புகள் மறவா கடையராய்
ஈர்புவிசையில் இழுபடும்
இலத்திரனியல் சாதனமாய்

சிந்தனை அற்றதான
சிகரங்கள் தொட முடியா
சீர்கேடுகள் கொண்டு
சிறகுகள் அற்றதாகி
செக்கு மாடுகளாய் தினமும்
சினத்தின் வசம் வார்த்தைகள் இல்லை
சீராவதற்கும் வழியேதும் இல்லை
சொற்ப நாளின் சுவைகள் அறிய
சூத்திரங்கள் அற்றபடி வாழ்வு

No comments:

Post a Comment