Wednesday 11 June 2014

காலங்கள்


காலங்கள் கடந்தன தான் எனினும்
கடந்து வந்த பாதைகளின்
கால்த்தடங்களின் வடுக்கள்
இன்னும் மனதில் அடையாளமாய்

எத்தனையோ எண்ணங்கள் சுமந்து
எதிர்க்க முடியாத எதிர்பார்ப்புக்களுடன்
இறுமாப்புக்களும் கடந்து
கடத்த முடியாத நாட்களுடன்

கனவுகளின் கட்டவிழ்ப்புக்களும்
கரை காணா மொட்டவிழ்தல்களுமாய்
முகைவெடித்து மணம் பரப்பி
முற்றிலும் முடிவற்றதாய் வாழ்வு

வானம் அளாவி வால்நட்சத்திரங்களாய்
எதிர்காலத்தின் எண்ணிக்கையோடு
ஏகாந்தத்தின் எல்லைகளற்று
எப்போதும் எதிர்வு கூறல்களோடாய்

எப்படியோ கடந்து வந்த காலத்தின்
கருப்பும் வெள்ளையுமான பக்கங்கள்
கண்ணில் அப்பப்போ தெரிகின்றது
காட்சிப் பிழைகளின்றி கனவுகளில்

எதிர்க்க முடியா ஏக்கங்கள்
இன்னும் இருக்கின்றன என்னுடனே
எப்போதாகிலும் நனவாகும் நம்பிக்கையுடன்
பாடையின் படுக்கைவரை பசுமையாக

No comments:

Post a Comment