Wednesday 11 June 2014

மனம்

 
 
 
 
அலை கடலாய் ஆர்பரிக்கும்
அப்பப்போ அமைதி கொள்ளும்
எட்டாத எல்லையெல்லாம்
எப்படியோ கடந்துவிடும்

ஏட்டிக்குப் போட்டியாக
எதுவும் செய்துவிடும்
ஏக்கம் கொண்டு பின்னர்
எதை எதையோ எண்ணிவிடும்

மார்க்கம் கண்டபின்னர்
மட்டிலா மகிழ்ச்சி கொள்ளும்
முந்தை வினைப்பயனை
முழுதுமாய் நம்பிவிடும்

அன்பு கொண்டு ஆட்படும்
அகந்தை கொன்று அகப்படும்
சிந்தை நிறைந்து சிரிக்கவைக்கும்
செம்மை கொண்டு சிலிர்க்கும்

சொந்தங்கள் தேடி சொர்கங்கள் கூட
சந்தங்களாகி சத்தங்கள் ஓய
நித்தமும் ஓய்வின்றி
நித்தியக் கடனாகி
நினைவின்றி ஓடும் மனம்
 
 
 

No comments:

Post a Comment