Wednesday 11 June 2014

வலிகள்


வலிகள் தாங்கி நட்புக்கு ஓர் கடிதம்

முகம் தெரியா முகப் புத்தகத்தில்
முதலும் முழுதுமாய்த் தெரியாது
கவிதைகளும் கதைகளும் கற்பனை கூட்ட
கண்டுணர்ந்தோம் நாம்

நல்ல நட்பென்றால் யாதெனில்
நன்மையையும் தீமையும்
உண்மையும் பொய்யும்
உள்ளதை உள்ளபடி உரைத்திடலே

முகம் பார்த்துத் தவறைச் சரியென்றும்
உண்மையைப் பொய்யென்றும்
முகத்துக்காய் உரைப்பது நன்றல்ல
முகமன் கூறும் நட்பல்ல

உள்ளொன்று வைத்து இன்னொன்று கூறும்
இல்லாதவற்றை இருப்பதாய்க் காட்டும்
வேடங்கள் போட்டு வேடிக்கை காட்டும்
வென்றிட உன்னை ஏதேதோ கூறும்

பகுத்தறிவை இறைவன் தந்தான்
பகுக்க உன்னால் முடியவில்லை
உந்தன் கூட்டில் உன்னை அன்றி
யாரும் வர முடியவில்லை

சொற்ப காலம் சொந்தமாய் எண்ணினேன்
சகோதரி போலென பொய்யா சொன்னாய்
உண்மை என நானும் நம்பிவிட்டேன்
உத்தமன் நீ என எண்ணிவிட்டேன்

எல்லாமே உந்தன் பொய் முகம் என
எனக்கு நன்கு காட்டிவிட்டாய்
நட்புப் புரியா மூடன் நீ
நாலு பேர்கள் போதும் உனக்கு
நாடு போற்ற வாழ்ந்திடுவாய்
நண்பா நீயும் பல்லாண்டு

No comments:

Post a Comment