Thursday 30 October 2014

மனதில் இருந்து விடுதலை - கவிதை


மனதில் இருந்து விடுதலை வேண்டும்
மறக்க முடியா நினைவுகள் இன்றி
மயங்க முடியா மனதும் இன்றி
மெலிதல் இல்லாச் செய்யல்களுடன்
மேன்மை பெற ஒரு மனம் வேண்டும்

செயற்கை அற்ற நட்பினதாய்
செயல்கள் எல்லாம் இயல்பினதாய்
சுவாசம் எங்கும் நிறைந்திட
சுத்தமான மனம் வேண்டும்

உயர்ந்த எண்ணம் கொண்டதுவாய்
உண்மை என்றும் உள்ளதுவாய்
உணர்வு கொண்டு துடிப்பதுவாய்
உயர்வாய் ஒரு மனம் வேண்டும்

ஆதிக்கம் என்பது அற்றதுவாய்
அகந்தை முற்றும் துறந்ததாய்
அன்பு கொண்டு என்னைச் சேர
ஆண்மை கொண்ட மனம் வேண்டும்

நம்பிக்கை கொண்டதுவாய்
நம்பிக் கை கொடுப்பதுவாய்
நம்பி நானும் நடப்பதற்காய்
நெகிழ்வுடனே ஒரு மனம் வேண்டும்

நட்டாற்றில் விடுவதுவாய்
நம்பிக்கை கொன்று நின்மதி தின்று
நினைக்கும் நேரம் நினைத்தபடியாய்
நிர்க்கதியாக்கியே நிதம் கொன்றிட
நிட்சயமற்றதாய் ஒரு மனம்
எப்போது எனக்கு வேண்டினும் வேண்டா

22.10.2014
Nivetha

No comments:

Post a Comment