Friday 31 October 2014

மனதின் ஓசைகள் - கவிதை

மனதின் ஓசைகள்
மயங்கிடச் செய்கிறன
மனவெளிதனை

நிலாவின் காய்தலில்
நேற்றுக் கண்ட கனா
காலையில் காணாமல்
போவதுபோல்.......
நெஞ்சின் நினைவுகளும்
அப்பப்போ வந்து
நெகிழ்த்திப் போகின்றன

சொல்ல மறந்ததை
சொல்லாமல் விட்டதை
காதினிக்க வந்து
கதையாகிப் போனதை
கூடிக் களித்ததை
கொஞ்சி மகிழ்ந்ததை
நட்பாகி நிறைந்ததை
நடுவில் சென்றதென
நாற்புறமும் மனம்
தென்றலாய் புயலாய்
நெஞ்சு நிறைத்துப்
போகின்றன


நிவேதா உதயன்
31.10.2014


No comments:

Post a Comment