Thursday 30 October 2014

கண்ணெதிரே காண்பவை - கவிதை


கண்ணெதிரே காண்பவை
கானல் நீராய்த் தெரிகிறது
 

மனிதமற்ற மனங்களின்
ஆசைகளின் ஓலங்களில்
அகப்படும் உயிர்கள்
உன்னதம் இழந்து
உயிர்வதை பட்டு
உழல்வதே வாழ்வாகி
உடைந்து நொறுங்கி
ஓட்டமுடியாததான
ஓர்மத்துடன் ...........

நகர்வின் அபிநயங்களில்
நல்லவராய் முகம் காட்டி
புறத்தே புழுவாய்
பேய் முகம் காட்டும்
பேடியராய்ப் பலர்
பித்தர்களாக்கி எமை
பரிதவிக்க வைத்து
பரவசம் கொண்டிடுவர்

வடிவங்கள் பலவெடுத்து
வக்கணையாய்ப் பேசி
வஞ்சப் புகழ்ச்சியுடன்
வாசனை அற்றவராய்
வன்மம் புடைசூழ
வஞ்சனையே அவராய்
வலிந்த விதியினதாய்
வடமிழுக்க முன்னிற்பர்

வகை தெரியா மனமே
வாழ்வைப் புரிந்திட
வண்ணங்கள் அல்ல
வாழ்வு ......
மேடுகள் காடுகள்
பகை நிறைத்த மாந்தர்
பகிர்தலற்ற பாள்மணம்
மிகைப்பட அனைத்தும்
மிகுந்ததே வாழ்வு

கல்லாய் ஆக்கிடு மனம்
கொல்லா வாழ்வது
கொண்டு சேர்த்திடும்
முள்ளாய் முரடர்
மூர்க்கமாய்க் குற்றினும்
வெல்லாமை கொண்டு
அவர் வெகுண்டு ஓடிட
நில்லாய் நீ மனமே
கருங்கல்லாய் நீ தினம்


29.10.2014
நிவேதா

No comments:

Post a Comment