Thursday 7 May 2015

மனவறை - கவிதை








கனதிகள் அற்ற
காகிதக் கப்பலாய் மாறி
கவலைகள் அற்று நான்
கண்வளர வேண்டும்

நினைவின் விளிம்புவரை
நிழல்தரும் அனைத்தும்
நிர்மூலமாக்குவதாய்
நெருடலாய் நிதம் நிகழும்
நெருக்குதல்கள் நீங்க
நிழற்குடையின் கீழ் நான்
நீள்துயில் கொள்ள வேண்டும்

மனவறையின் பக்கம்
மண்டிய படி கிடக்கும்
மூச்சுப் புகமுடியாப் புதரின்
முடிவற்ற மீதங்களை
மட்டுப்படாத காலத்தால்
கருணைக் கொலை செய்திட
மனம் ஆர்ப்பரிக்கிறது

ஆயினும் அறுதியிட முடியா
ஆழத்தில் கால்பதித்து
அகக்கதவை எப்போதும்
அறைந்து சாற்ற முடியாத
அகத்தின் அறம் இழந்து
அளக்கமுடியா ஆளத்தை
அடிமுடி தேடியபடியே
அல்லலுடன் கடக்கிறேன்

No comments:

Post a Comment