Wednesday 20 May 2015

இடர்கள் கடந்தபின்னும்



இடர்கள் கடந்தபின்னும்
இயலாமை என்னும் விருட்சம்
என் இயல்பை நிறுத்துவதாய்
பிடிப்பற்று மனம் எங்கோ
பேரோசையுடன் அலைகிறது


அத்தனையும் கண்முன்னே ஆயினும்
அருமை தெரியாத அலைபாய்தலில்
அடுத்தவரின் அகவழி அறியார் அறிவிலர்
ஆசைகொண்டு அலைந்திடுவர்
இங்கொன்றும் அங்கொன்றும்
எங்குமாய் எதற்குமாய்
எப்போதும் இருந்ததில்லை

புதியன நாடி புதுமையில் உழன்று
புரையோடிப் போகிறார் புத்தியற்று
எப்படியாயினும் எப்போதோ
என்னிடமும் விடைபெறும்
எல்லா எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்
அப்போது அந்த விடுதலைக்காய்
ஆவலற்றுக் காத்திருக்க
ஆழ்மனம் ஆவல் கொள்கிறது

No comments:

Post a Comment