Saturday 26 April 2014

வசந்தம் வந்தது



நாளும் பொழுதும்
மொட்டுக்கள் மலர்களாகி
மகரந்தக் கனிகளாகி
பூத்தும் காய்த்தும்
புதிய அழகு கண்டன

மழையில் நனைந்து
மயங்கி நின்றன
காற்றின் கவர்ச்சியில்
கவித்துவம் கண்டன
காலை வெயிலின்
கனதியற்ற ஒளியில்
கண் மூடிக் கிடந்தன

இரவின் அமைதி கிழிந்து
இனிமை கலைத்து
கோரக் காற்றின்
கொடுமுகம் காட்டி
சிரித்த விதியின் சினத்தில்
பூவும் காயும் மொட்டுமல்ல
பூமியின் காலடி வேரறுத்து
புதைந்து போனது
பூத்து நின்ற புதுச்செடி

No comments:

Post a Comment