Friday 14 August 2015

விலக மறுக்கும் கிரகணங்கள்



 



அன்பென்னும் வார்த்தையை
ஆயுதமாக்கி மூடர்
ஆசை என்னும் வினை விதைத்து
எம்மை அடக்கிடுவார்

ஆதி மூலமே நீ என்பார்
அடியில் கிடக்கும் மலர் தாம் என்பர்
முற்பிறப்பு தொடருதென்பார்
முடிவின்றி முடிவுவரை
மூலாதாரமாய் இருப்பேன் என்பார்

தேவைக்காய் தேடிவந்து
திக்குமுக்காட்டி எமை
தெருவில் விடுவதற்காய்
தெவிட்டத் தெவிட்டப் பேசி
தம்மை எம்முள் விதைத்திடுவார்

தேவைகள் முடிந்தபின்னே
தெரியாத யாரோபோல்
திடமுடிவெடுத்து எம்மைத்
திக்குமுக்காட வைப்பார்
தெருவிலும் விட்டுடுவார்

எதற்காய் எம்மைப் படைத்தான்
எதுவுமற்று ஏங்கிடச் செய்து
இரக்கமற்று இதயம் உடைத்து
தயக்கமற்று தடைகள் கொண்டு
சிலதுக்காகச் சிந்தை தகர்த்து
மனது கொன்று மகிழ்வு கொன்று
திடம் கொண்டு திறமை தகர்த்து
வதை கொண்டு வாழ்வு தகர்க்க
எதற்காய் எம்மைப் படைத்தான்
02.07.2015

No comments:

Post a Comment