Friday 14 August 2015

மரணத்தின் நுகரமுடியா











மரணத்தின் நுகரமுடியா வாசனையாக
வாழ்வின் பக்கங்கள் மடிக்கப்படுகின்றன
கேள்விகளும் இல்லாத பதில்களுமாய்
வசந்தங்கள் வராத நாட்களின் கணக்கு
கிடைக்காத எண்ணிக்கையைத் தினம்
தந்தவண்ணமே தடுமாறுகின்றன

அன்பின் அசைக்கமுடியாத அளவின்
காலத்தின் கணக்குகளும் என்றும்
ஏற்றுக்கொள்ளமுடியா நம்பிக்கையின்
எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்து
எதுவுமற்ற நிலையை எதிர்கொள்வதாய்
எண்ணக் கிடங்குகளில் எப்போதும்
நிரம்பியபடியே காத்திருக்கின்றன

மறக்கும் நிலையற்ற மனதின் மகிமை
மற்றவர் எண்ணத்தை மலிந்ததாக்க
பெறுமதியற்ற காலங்களின் நேரங்கள்
பெருவாரியாக இறைக்கப்பட்டபடி
முகிழ்ந்திடமுடியா மனப்பாறையை
மீண்டும் மீண்டும் தகர்க்க முயன்று
தோற்றுக்கொண்டே இருக்கின்றன
10.08.2015

No comments:

Post a Comment