
நினைவுகளின் நிர்வாணத்தை
மறக்க மறுக்கும் மனதை
என்ன செய்வது
மறுதலித்தே தொகுத்து
மீண்டும் மீண்டுமாய்
மாயக்கண்ணாடியில் பார்ப்பதாய்
நிழல் பிம்பத்தைத் தோற்றுவித்து
நிலைதடுமாற வைக்கிறது
காரணமின்றி கண்முன் தோன்றும்
கனவற்ற காட்சிகளின் சாட்சி
வேண்டுவன எல்லாம் எப்போதும்
காரியங்களோடு கைகோர்த்தபடி
காயங்களை காணும் இடமெங்கும்
கண்மூடி விதைத்தபடி செல்கின்றன
காரணங்கள் அற்று நானும்
காணவே முடியாதனவற்றை
காண்பதான மாயை சுமந்து
மீண்டுவரா நாட்களின் தகிப்பில்
மனதின் மகிழ்வு தொலைய
எந்நேரமும் விடுபட எண்ணிடும்
நூலிழை பற்றியே நிதமும்
எழுந்துவர எத்தணித்தபடியே
எதுவும் முடியாது காத்திருக்கிறேன்
18.07.2015
No comments:
Post a Comment