Friday 14 August 2015

ஒவ்வொரு தடவையும்



 

ஒவ்வொரு தடவையும் உன் அலட்சியம்
என் மனதை உருக்குலைக்கவே செய்கிறது.
ஆனாலும் என் அன்பின் அச்சாணியும்
கூடவே உன்னுடன் இறுக்கமாக
பிணைக்கப்பட்டுள்ளதால்
உன்னைத் தூக்கி எறிந்து விட்டு
என்பாட்டில் இருந்துவிட முடியாது
என்னை நானே வருத்தியபடி
தவமிருக்கிறேன் உனக்காக

ஆனாலும் ஏமாற்றமும்
அதன் எதிர்வினைகளும்
எனக்கு மட்டுமே சொந்தமாக
எக்கணமும் அத்தனையும் விழுங்கி
என் மனம் கொண்டிடும் ஏக்கம் எப்போதுமாக
எதுவும் செய்வதற்று ஏங்கும் மனதின் மூச்சடக்கி
ஏமாற்றத்தின் ஒலியடங்க
எண்ணப்பிரளயத்தின் நடுவில் நிற்கிறேன் நான்

ஆனாலும் எப்போதும்போல்
அந்தரத்தில் ஆடும் ஊஞ்சல்
கேட்டுக்கொண்டே இருக்கிறது
தோற்றுக்கொண்டிருப்பது நானா நீயா என ??????
06.07.2015

No comments:

Post a Comment