Friday 14 August 2015

காதலின் சரணடைவு




 காதல்

கற்பனையில் எண்ணியவை
உன்னிடம் கண்டதனால்
காதல் கொண்டேனடா
காலமெல்லாம் காத்திருந்து
உன்னைக் கண்டேனடா

கண்ணிமை மூடினும்
என்முன்னே நின்று
காதல் செய்கிறாய்
காதினிக்க  வந்து
காதல் மொழி பேசுகிறாய்

கயவனே உன்னைக்
காணாதிருந்திருந்தால்
காலமெல்லாம் நான்
கற்பனையில் வாழ்ந்திருப்பேன்

கண்டதனால்
நிதம் என் உயிர் துடிக்க
நினைவு நிதம் வதைக்க
நேர காலம் தெரியாது
நெகிழ்ந்து போய் கிடக்கிறேன்.

நெருப்பாய் இருந்தவள்
நெக்குருகி நிற்கிறேன்
நெஞ்சம் முழுதும்
உன்னை நிரப்பி
நினைவில் உன்னை முகர்ந்து
நித்தம் உனக்காய்
காத்திருக்கிறேன்

முகம் பார்க்க முடியாமல்
சத்தமிலா முத்தமின்றி
சர்வமும் இழந்து
சரணடயக் காத்திருக்கிறேன்
உணர்வாயா ?????????



No comments:

Post a Comment