
வானவெளியின் வண்ணமேகங்களாய்
மனதெங்கும் காட்சிகள் வியாபிக்க
வசந்தங்களின் வரிசைகளில் மனம்
வசமிழந்து போகின்றது
அன்பின் பரிமாறல்கள் நிதமும்
அவசரமின்றி அரங்கேறி வர
அமிழ்தின் சுவை திகட்டி
ஆனந்தத்தின் அதிர்வுகள் எல்லாம்
அணிவகுத்து நிற்கின்றன
குளிர் நிலவின் ஒளிர்வாய் வீசும்
கோடையின் தென்றல் கூடி
குசுகுசுப்பாய்ச் சேதிசொல்லிக்
கூடலின்றித் தவித்த மனதை
கும்மாளமிட வைக்கின்றன
கார்காலம் மீண்டும் வரலாம்
கனவுக்காட்சிகளும் கலையலாம்
கனதியுடன் காத்திருக்கும் என்
காலாவதியாகா நம்பிக்கைகள்
கடைசிவரை எனக்கு மட்டுமாய்
கண்மூடும்வரை கலைந்திடாது
காற்றுவெளியில் காத்திருக்கும்
28.07.2015
No comments:
Post a Comment