Friday 14 August 2015

வானவெளியின் வண்ணமேகங்களாய்



வானவெளியின் வண்ணமேகங்களாய்
மனதெங்கும் காட்சிகள் வியாபிக்க
வசந்தங்களின் வரிசைகளில் மனம்
வசமிழந்து போகின்றது

அன்பின் பரிமாறல்கள் நிதமும்
அவசரமின்றி அரங்கேறி வர
அமிழ்தின் சுவை திகட்டி
ஆனந்தத்தின் அதிர்வுகள் எல்லாம்
அணிவகுத்து நிற்கின்றன

குளிர் நிலவின் ஒளிர்வாய் வீசும்
கோடையின் தென்றல் கூடி
குசுகுசுப்பாய்ச் சேதிசொல்லிக்
கூடலின்றித் தவித்த மனதை
கும்மாளமிட வைக்கின்றன

கார்காலம் மீண்டும் வரலாம்
கனவுக்காட்சிகளும் கலையலாம்
கனதியுடன் காத்திருக்கும் என்
காலாவதியாகா நம்பிக்கைகள்
கடைசிவரை எனக்கு மட்டுமாய்
கண்மூடும்வரை கலைந்திடாது
காற்றுவெளியில் காத்திருக்கும்


28.07.2015 

No comments:

Post a Comment