Sunday 7 June 2015

நினைவுகளின் ஊர்வலங்கள் - கவிதை










நினைவுகளின் ஊர்வலங்களில் நிகழ்காலம்
இல்லாமலே போய்விடுகிறது
கனவுகளின் காந்தத்தில்
கண்ணில் தெரியும் உண்மைகளும்
காணாமலே போகின்றன

நிகழ்காலக் கவிதையாய்
நித்தம் காணும் காட்சிகள்
நிட்சயமற்றதாய் மாற
எதிர்காலத்தின் இயங்குநிலைகள் எல்லாம்
எதிர்ப்பின் பாற்பட்டு
எள்ளளவும் ஏற்றமடையாது எதிர்வீச்சின் கதிர்களில்
எச்சங்களாய் விடுகின்றன

மனக்காட்டின் அடர்த்தியில்
மிடுக்கற்றுப் போகும் மின்மினிப்
பூச்சிகளாய் மனதும் மயக்குற்று
மெல்லிழையாய் மேனிதழுவும்
வசந்தமாய் அப்பப்போ வந்துபோகும்
நினைவுக் குதிரின் சிதறல்களில்
நாளையின் நடைபெறா நெஞ்சத்து
நரக நிகழ்வுகளும் நாட்காட்டியாய்
நினைவுகூரப்படுகையில்
முக்காலமும் உணரா மூலவேராய்
மீளாநினைவுகளை மீட்டிசைக்கப் பார்க்கிறேன்

No comments:

Post a Comment