Thursday 11 June 2015

நேசமாய் - கவிதை

Nivetha Uthayan's photo.


நீர் சுமந்த காற்று நேசமாய் உடல் தழுவ
குளிர்ந்து மனம் குதூகலிக்கிறது

மனதின் மட்டற்ற மகிழ்வு
திறந்த பறவைக் கூண்டாய்
விரிந்து பறவையாய் சிறகடிக்க
வானவெளியின் மேகப்பொதிகளிடை
புதைந்தும் புதையாது பறந்தோடிப் போகிறேன்

எண்ணற்ற கற்பனைக் குவியல்களில்
எண்ணங்கள் சிதறிப் பறந்திட
சூரியக் கதிர்களின் தெறிப்பில் மனம்
வானவில்லின் வண்ணங்கள் கண்டு
வரிசையாய் சதிராடி ஒளிர்கின்றன

மனதின் பசுமை மகரந்தங்களாய் நிறைய
காண்பதெல்லாம் கனவுக்குவியல்களாய்
கண்சிமிட்டிக் கடந்து போகையில்
நீயும் நானும் மட்டுமேயான வெளியில்
நிலவின் பூரிப்பில் நின்மதி கொள்கிறேன்

No comments:

Post a Comment