Wednesday 3 June 2015

ஏகாந்த விடியல் தேடி

 Nivetha Uthayan's photo.

சாய்ந்துகொள்ள எனக்குத் தோள் வேண்டும்

சாகசம் அற்றதாய் சூதுக்கள் வெல்வதாய்
சுதந்திரமாய்ச் சாய்ந்துகொள்ள
சொந்தம் கொள்வதாய் ஒரு தோள் வேண்டும்

நேர்மை கொண்டதாய் நெருப்பாய் இருந்து
நட்பாய் எனக்கான நம்பிக்கை கொள்ள
நிட்சயமானதாய் ஒரு தோள் வேண்டும்

நெஞ்சம் முழுதும் நேசத்தால் நிரப்ப
நெகிழ்வாய் என்தலை கோதி அணைக்க
நிமிர்வாய் ஒரு தோள் வேண்டும்

பழுதற்றதாய் மனம் பகிர்வதாய்
பாசம் கொண்டு நேசம் சொல்ல
பக்குவமாய் ஒரு தோள் வேண்டும்

எண்ணற்றதாய் எதிர்பார்ப்பற்றதாய்
எண்ணம் வென்று எதிவு கூறிட
எனக்காகவே ஒரு தோள் வேண்டும்

வேடமற்றதாய் வினைகளற்றதாய்
விருப்புடன் என் உறவு கொள்வதாய்
விலங்கற்ற ஒரு தோள் வேண்டும்

சரிநிகராய் மனம் படித்து சாந்தம் கொள்ளவைத்து
சலனங்கள் அறுத்திட சமதையாய் மதித்திட
சஞ்சலம் அற்றதாய் சரிநிகர் தோள் வேண்டும்

நானாய் எனக்காய் என்னுள் எரியும்
தீயின் தகிப்பை தன்னதாக்க
தாயாய் எனக்கொரு தோள் வேண்டும்
எப்போதும் எதிர்ப்பின்றிச் சாய்ந்துகொள்ள
என்னோடு எனக்காகத் தோள் வேண்டும்

No comments:

Post a Comment