Tuesday 23 June 2015

வானம் வசப்படும் - கவிதை

 

மண்ணில் நாம் வந்து
பிறந்துவிட்டோம்
வாழ்வு எது என்றும்
அறிந்துவிட்டோம்
எண்ணிலாத ஏக்கங்களை
எம்மைச் சூழ ஏற்றிவிடோம்


பொன்னின் ஆசைகள் போதையாகிட
பொருள் மட்டுமே வாழ்வுமாகிட
பேரவா கொண்டு பேதைமை கொண்டு
போட்டிகள் கொண்டிங்கு
போதையிலேயே வாழுகிறார்

மண்ணின் ஆசைகள்
மனதெங்கும் மாய்த்திட
மானமிழந்து மதிகெட்டலைந்து
சுற்றமிழந்து சுறுசுறுப்பிழந்து
சொந்தமிழந்து சொத்துமிழந்து
செக்குமாடுகளாய் வாழுகிறார்

பெண்ணின் ஆசையில்
கண்ணும் குருடாகிட
பேரிடர் பல தாங்கியே நிதம்
பெண்டிர் மறந்து பெருமை மறந்து
பித்தராய்ப் பலர் வாழுகிறார்

உயிர் காக்க உணவே இன்றி
உடல் காக்க உடையும் இன்றி
உறவேதும் உதவிட இன்றி
உணர்வு கொன்று உயிர் காவ
உள்ளம் வென்று உணர்வு காக்கும்
உருக்குலைந்த உண்மை மாந்தர்

இத்தனையும் இதயம் கொண்டு
இன்னுயிரில் இரக்கம் கொண்டு
அறிவு கொண்டு ஆசை வென்று
இறைமை கண்டு இரக்கம் கொண்டு
எளிமை கொண்டு எதுவும் செய்தால்
வானம் என்றும் நம் வசப்படும்

No comments:

Post a Comment