Tuesday 23 June 2015

ஓய்ந்துவிட்ட கனவு

 Nivetha Uthayan's photo.

தெருவோரம் வீசிய காற்றில்
தென்னை மர ஓலைகளாய்
மனம் அசைந்தாட
தேங்கிக் கிடக்கும்
பழைய பக்கங்கள் எல்லாம்
ஒவ்வொன்றாய் புரள்கின்றன


பட்டம் விட்ட காலம்
பள்ளிப் பருவ நாட்கள்
பதின்ம வயதின் காதல்
பாலியத்தின் நட்பு
கிளித்தட்டு விளையாட்டு
பார்வையின் பரிமாறல்
பண்படாத நெஞ்சம்
பேருந்துப் பயணம் என
பழையனவெல்லாம் வந்து
படம் காட்டிச் செல்கிறது

மீட்டவே முடியாத அந்த
முடிவாகிப் போன நாட்கள்
மூச்சின் முடிவு மட்டும்
முகம்மோதி அப்பப்போ
முட்டும் காற்றாய் நின்று
முகவரி தொலைத்ததை
முடிவற்ற வலிகளின்
முற்றுப்பெறாத வரிகளாய்
முட்களாய்த் தைத்தபடி

No comments:

Post a Comment