Tuesday 23 June 2015

சோதனைச்சாலை - கவிதை



எப்போதும் நான் அப்படியே இருக்கிறேன்

மற்றவரைப் புரியமுடியாது
உற்றவரின் துயரம் அறியாது
கற்பனை வானில் பறந்துகொண்டே
கடிவாளமற்ற சிந்தனையோடு


என்னைக் காயப்படுத்துவோரை
கழற்றி எறிய முடியாதவளாய்
மீண்டும் மீண்டும் மனதில்
விழுப்புண் தாங்கியபடி விழுங்க முடியாதைதை எல்லாம்
எப்படியோ விழுங்கியபடி .........

எப்படி மீண்டு வருவேன் நான்

பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழ
மனம் ஆசை கொள்கின்றது ஆனாலும்
சூழ எரிந்து கொண்டிருக்கும்
நெருப்பின் வீரியத்தில்
கைகொடுக்க யாருமேயற்று
காணும் இடம் எங்கும் தீ நாக்குச் சூழ
செய்வதறியாது தவிக்கிறேன் நான்

No comments:

Post a Comment