Wednesday 3 June 2015

ஆட்டம் காணும் அச்சாணி

Nivetha Uthayan's photo.

மனதினில் தோன்றும்
மாயைகள் எல்லாம்
முறியாத முட்களாகி
சிந்தை முழுதும் சிதைத்து
முந்தை வினை முழுதும்
முடிவற்றதாக்கித் தினம்
மதி கொன்று விதி வெல்ல
வேளை பார்த்திருக்கிறது


அன்பென்னும் அச்சாணி
ஆட்டம் கண்டபடி என்றும்
அச்சுறுத்தலைத் தந்து
அகத்தின் அறம் தொலைய
அல்லல் மட்டும் என்றும்
அறிதியிடா நிலமாய்
ஆணவத்தின் ஏணியில்
எப்போதும் அமர்ந்தபடி

எல்லைகள் அற்றதான
எண்ணங்கள் விதையாகி
ஏகமாய் எங்கும் பரவி
எதிர்மறை விருட்சங்களை
எங்கெங்கோ நாட்டி
ஏக்கமுறச் செய்கிறதாய்
எக்காளமிட்டபடி தினம்
எதிர்வலம் வருகின்றன

நீக்கமற நிறைந்திருக்கும்
நிகழ்வுகளில் நிழல்கள்
நாற்ற மனம் துறந்து
நேர்வழி சென்றிடினும்
நூற்பதற்கான நிலையற்று
நகர்வதற்காய்த் தினம்
நிறம் மங்கியதான நிழலில்
நிதமும் காத்திருக்கின்றன

No comments:

Post a Comment